கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைமுதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் -இராணுவ தளபதி சந்திப்பு!
வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்க எடுத்த தீர்மானம்!
திறமையான தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் - சவுதியின்...
|
|