கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதத்தை பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும் – மாவட்டச் செயலகம் தகவல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதங்களை தமக்குரிய பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பட்டதாரிகளுக்குரிய நியமனக் கடிதங்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நியமனக் கடிதங்களை பட்டதாரிகள் இன்றிலிருந்து பெற்று எதிர்வரும் 2 ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்குள் தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 133 பட்டதாரிகளும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 35 பட்டதாரிகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 47 பட்டதாரிகளும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 52 பட்டதாரிகளும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
60 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|