கிளிநொச்சியில் இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவுமுதல் அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளைக் கொண்டதாகவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிகிச்சை நிலையமானது, கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயற்படவுள்ளதுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட குழாம் அங்கு சேவையில் ஈடுபடவுள்ளது.
குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையிலுள்ள கிருஸ்ணபுரம் பகுதியில் ஏற்கனவே தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்வேலி கோப்பாய்ப் பிரதேசங்களில் கால்நடைகள் திருட்டுச் செல்லும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரிப்ப...
பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி - அமைச்சர் ராஜித!
ஊருக்கு உபதேசம் உனக்கில்லையா யாழ் மாநகர முதல்வா – பாஷையூர் மக்கள் கேள்வி!
|
|