கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

”கவிக்கோ” அப்துல் ரகுமான் தனது 80 ஆவது வயதில் சென்னையில் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையிலுள்ள அவரின் வீட்டில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
1937 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த அப்துல் ரகுமான், 1960 ஆம் ஆண்டிற்கு பின்னர் கவி உலகிற்குள் பிரவேசித்தார்.
புதுக்கவிதைத் துறையில் தடம்பதித்த அப்துல் ரகுமான் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.கவிக்கோ அப்துல் ரகுமானின் முதலாவது கவிதைத் தொகுப்பான ”பால்வீதி” கவிதை தொகுப்பு 1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
கவிதைகள் மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். புதுக்கவிதை குறித்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இணையத்தளம்!
வீட்டு சமையல் எரிவாயுவின் ப்ரொப்பேன் செறிவு 30 சதவீதமாக இருக்க வேண்டும் - இலங்கை தர நிர்ணய நிறுவக...
இலங்கையின் சுற்றுலா, கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம் - கடல் மற்றும் வர்த்தக கேந்திர...
|
|