கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதிமுதல் 28 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடவிதானங்கள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து இணையத்தளம் ஊடாகவும் வலயக் கல்வி அதிகாரிகளிடமிருந்தும் தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்;
குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தும் இறுதித் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்;தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|