கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலும் பாரிய வெடிகுண்டு செயலிழப்பு!

Wednesday, April 24th, 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டான பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்த வெடிகுண்டை இலங்கை விமான படையினர் கண்டுபிடித்துள்ளனர்.மீட்கப்பட்ட வெடிகுண்டு செயழிக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டான பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டுத்தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Related posts:


அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்...
பிரதமர் இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட வேளையில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி? -விசாரணை ஆரம்பம் என பொத...
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!