கடும் வறட்சி – வடக்கில் 99,191 பேர் பாதிப்பு!

தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக வட மாகாணத்தில் 28,950 குடும்பங்களை சேர்ந்த 99,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 53,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
யாழ் மாவட்டத்தில் 33,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,296 பேரும், கிளிநொச்சியில் 5,720 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
Online Visa வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை - குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
கொரோனா சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறிய பின்னர் பிசிஆர் பரிசோதனை செய்வது அவசியமற்றது - சுகாதார சே...
மகளிடம் சேட்டை புரிந்தவரின் காதை அறுத்த தந்தை - கிளிநொச்சியில் சம்பவம்!
|
|