கடும் வறட்சி: நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை!

குடி நீரை அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் என்று நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் விநியோகிக்கக்கூடிய ஆக கூடிய நீர் விநியோகிக்கப்படுவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபையின் கொழும்பு மேற்கு மற்றும் மத்திய பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் ரஞ்சித் சமரசிங்க பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்பொழுது பயன்படுத்தப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பகல் வேளையில் மேட்டு நிலப்பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகிக்கம் இடம்பெறுகின்றது.
இவ்வாறான பகுதிகளில் இரவு நேரத்தில் நீரை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நீரை சேமித்து பயன்பத்துவது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த தரவுகளை அரசியலமைப்புச் சபை செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க நடவடிக...
மிருசுவில் படுகொலை : மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்க கோரிக்கை!
மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர்...
|
|