கடும் வரட்சி : 4 இலட்சம் பேர் பாதிப்பு!

நாட்டின் 9 மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் சுமார் 4 லட்சத்து 36 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளே வறட்சியினால் அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போதியளவு மழை நீர் கிடைக்காமை காரணமாக பெருமளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஆங்கிலஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!
அரியாலை படுகொலை: உண்மைகள் அம்பலம்!
தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு - மஹிந்த ராஜபக்ஷ!
|
|