கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல்!

Saturday, May 28th, 2022

நாட்டின்  தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்று (27) வழங்கப்பட்டன. கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். சனக்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியில் தங்கியிருந்த மக்களுக்கும் திணைக்களத்தின் பாதுகாப்புக்காகச் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் - நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்ப...
அரச சேவையில் இணைந்துக்கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும் - வடக்கின் ஆளுநர் வலியுறுத...