கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் பலி – யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை மிக அதிகம் – அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!

கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைப்பெற்ற 30 வருடப் போரில் கூட 29 ஆயிரம் பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி விபத்துகள் தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,
“ஜனவரிமுதல் இதுவரை ஆயிரத்து 760 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகம் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள்தான் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துகின்றனர்.
அதனை பரிசோதிக்க எந்த உபகரணமும் இல்லை. ஆகவே அந்த உபகரணங்களை விரைவில் கொண்டு வருவோம்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
ஜி-24வின் தலைமை இலங்கைக்கு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முரண்பட்ட பல்கலை மாணவர்கள் பொன் சிவகுமாரனின் நினைவு தினத்தை திரும்ப...
இலங்கையின் பொருளாதார நெருக்கடி - பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் ஜெய்சங்கர் விசேட ஆலோசனை!
|
|