கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை!

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் எனயாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இதற்குரிய ஆயத்தங்களை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு எமில்போல் அடிகளார் மேற்கொண்டுள்ளார். இவ்வருடம் இத் திருவிழாவிற்கு உள்நாட்டிலும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
காலஞ்சென்ற கந்தையா சச்சிதானந்தத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதிஅஞ்சலி!
கட்டாக்காலி நாய்கள் கொலை: குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ...
நாடு முழுவதும் 4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – சரியான நடைமுறையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும்...
|
|