ஒரு வார காலத்திற்குள் 49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

Wednesday, January 9th, 2019

கடந்த டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதிக்குள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சுற்றிவளைப்பின் போது அபராதத் தொகையும் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, 2018 ஆண்டு 21,188 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 21,254 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: