ஒரு தினமாக மட்டுப்படுத்தப்பட்டது இவ்வார நாடாளுமன்ற அமர்வு!

எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத்தேர்தல் காரணமாக இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் அடுத்த நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள விவாதத்தை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பிலும் இன்று விவாவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Related posts:
அதிபர் நியமனங்களை உடன் நிறுத்தி வையுங்கள்!
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
கணித பாடம் தொடர்பில் கல்வியமைச்சு விசேட திட்டம்!
|
|