ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

அசாதாரண காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கான திகதிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஜூலை மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்காக வேண்டி, 93953 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி சாரதி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்துப் பரீட்சை ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறிப்பிட்டுள்ளது.
Related posts:
யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்...
பெப்ரவரியில் ஆரம்பமாகிறது விசேட உயர் நீதிமன்றம்!
போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் ...
|
|