ஒதுக்கப்பட்ட நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுங்கள் – அனைத்து அரச நிறுவனங்களிடமும் நிதி அமைச்சு, வலியுறுத்து!

வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உரிய வகையில் முகாமைத்துவம் செய்யுமாறு நிதி அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் மேலதிகமாக நிதியை ஒதுக்க முடியாது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்திற் கொள்ளாது, மேலதிகமாக நிதி செலவிடப்படுமாயின் அதற்கான முழுமையான பொறுப்பினை அந்தந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவ...
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை -...
|
|