ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்து!

அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கத்தினை விட்டுவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து விடுபட சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காணிகளுக்கான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - கல்வி அமை...
சட்டவிரோத மீன்பிடிக்காக எல்லைதாண்டிய இந்திய இழுவை படகு குருநகர் மீனவர் படகு மீதி மோதியதில் அடாவடி...
|
|