எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த ஆறு இந்திய மீனவர்களை நெடுந்தீவு பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஜகதாப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டு யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து ஒரு டோலர் படகு, மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் இன்று யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி : மூன்று கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம் - பரீட்சைகள் திணைக்க...
கொரோனா வைரஸ்: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!
|
|