எயார் பிரான்ஸ் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை!

Friday, July 9th, 2021

பிரான்ஸின் தேசிய விமான சேவையான எயார் பிரான்ஸ் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஐந்தாவது பெரிய சுற்றுலா மூல சந்தையாக பிரான்ஸ் திகழ்கின்றது. அதற்கமைய, 1980 ஆம் ஆண்டுமுதல் முறையாக கொழும்பிற்கு அதன் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.

இந்நிலையிலேயே 35 வருடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் வரை தமது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம்முதல் இந்த பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயார்பிரான்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. வாரத்திற்கு மூன்று முறை கொழும்பு வரை இந்த பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விமான சேவைகள் ஆரம்பிப்பதன் மூலம் பயண மற்றும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் அதே வேளையில், இலங்கைக்கும் மிகப் பெரும் நன்மைகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: