எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் கோரிக்கை!

இலங்கையில் பின்பற்றப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் குறித்தும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் மத்தியில் உருவான வைரஸ் பரவல் 14 நாட்கள் கடந்தும் நீடிப்பதால் வைரஸ் தொற்றிற்கு இலக்கான ஒருவர் அல்லது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவற்றதாக காணப்படுகின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
ஒருவரை 14 நாட்களாக 21 நாட்களா தனிமைப்படுத்தவேண்டும் என்பது தெளிவற்றதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெளிவான பதிலை வழங்கவேண்டும் எத்தனை நாள் தனிமைப்படுத்தவேண்டும் என்பதை தெரிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related posts:
|
|