எதிர்வரும் 30 ஆம் திகதி வேலணைப் பிரதேசசபையில் தேசிய வாசிப்புவிழா!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல் விழா எதிர்வரும் 30 ஆம் திகதி வேலணைப் பிரதேசசபையால் நடத்தப்படவுள்ளதாக தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு வேலணைப்பிரதேசசபையின் தேவா திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளதாகவும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனும் சிறப்பு விருந்தினர்களாக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் முருகனேசன், வேலணை உதவிப் பிரதேச செயலர் கமலராஜனும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்பள்ளிகள் எந்தத் திணைக்களத்தின் கீழ் இயங்குகிறது என்பதைக் கூட உறுதிப்படுத்த தகுதியற்ற அவல நிலையே ...
ஏழை மக்களது வாழ்வியல் விடியலுக்காக உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின் யாழ்ப்ப...
சட்டத்தை திருத்த சுகாதார அமைச்சு தீர்மானம்
|
|