எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இதனை தெரிவித்தார்
தற்போது பாடசாலைகளில் 39 மாணவர்கள் ஒரு வகுப்பறையில் அதிக பட்சமாக உள்வாங்கபடுகின்றனர்
அவர்களை 35 ஆக மட்டுப்படுத்தி ஏனைய மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போது அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறந்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்
Related posts:
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு – உலகளவில் 6 இலட்சம் நோயாளர்கள் பூரண குணமட...
செட்டிகுள வைத்தியசாலையின் தேவைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்...
குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
|
|