எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அறிவிப்பு!

முதல் கட்டமாக கொவிஷீல்ட் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில்-
முதல் கட்டமாக கொவிஷீல்ட் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக செலுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகள் போதுமானளவு இருக்கின்றது.
அதனடிப்படையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு 2 வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
இதேவேளை 6 மில்லியன் சைனோஃபார்ம் கொவிட் தடுப்பூசிகளும் சீனாவில் இருந்து நாளை கொண்டுவரப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|