ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் யாழ்.மாவட்ட மக்கள் வீதிக்கு வருவதை நாம் விரும்பவில்லை – யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் மக்கள் கூட்டமாக வீதியில் நடமாடுவதை தாம் விரும்பவில்லை என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது மக்கள் பட்ட இன்னல்களை நாமறிவோம். இந்த நிலையில் எமது ஜனாதிபதி இந்த நிலைமையை சிறிது சிறிதாக விலக்கி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில்தான் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தினாலும் பொதுமக்கள் கூட்டமாக வீதி இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை. தேவையானவர்கள் மட்டும் வீதிக்கு வாருங்கள். தேவையில்லாது வீதிகளில் பயணிக்காது தனித்திருத்தல் உங்களுக்கும் உங்களுடைய சமூகத்திற்கும் நல்லது.
எனவே மக்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும், தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்ர்க்குமாறும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|