ஊரடங்கு உத்தரவு: மீறிய 18,605 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 19441 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1724 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 496 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5082 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 18 ஆயிரத்து 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த 4 ஆயிரத்து 863 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, நேற்ற மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 196 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
|
|