ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது – ஊடகத்துறை அமைச்சர்!

அரசாங்கம் என்ற ரீதியில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் மத்திய நிலையம் மற்றும்இலங்கை பத்திரிகை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 2006ம் ஆண்டு தயாரித்த தேசிய ஐக்கியத்திற்கான ஊடகப் பணி குறித்த ‘வெலிகம பிரகடனம்’ தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வு அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்றது.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் உரையாற்றுகையில்: ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, சுதந்திரம் என்பன உறுதி செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. தகவல் அறியும் உரிமை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன ஊடக ஒழுக்கப்பாட்டு ஆணைக்குழுவுக்கான சட்டமூலம் 3 மாத காலப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார். நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்வதற்கான பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|