ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது – பிரதமர் தெரிவிப்பு!

ஆட்சி மாற்றத்தை ஊடகங்களில் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு அசிதிசி காப்புறுதி திட்டம் வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊடகங்களினால் அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் முடியும். அதேசமயம் அரசாங்கத்தை வீழ்த்தவும் முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் அரசாங்கம் ஒன்றை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது. அவ்வாறு பாதுக்காக்குமாக இருந்தால் இதனைவிட பாரிய அளவிலான காப்புறுதியை வழங்க வேண்டிய நிலைமை ஏற்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்!
ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம்!
பூநகரி பிரதேசத்திற்கு ஜனாதிபதி விஜயம் - நகர அபிவிருத்தி தொடர்பில் மீளாய்வு!
|
|