உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் குழு நியமனம்!

தேர்தல்கள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.
இந்த குழுவை நியமித்து அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்றையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஆணையத்தின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய செயற்படவுள்ள நிலையில் ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி தவலிங்கம் ஐ.ஏ.ஹமீத் ஆகியோர் உறுப்பினர்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
தடம் புரள்கின்றது கூட்டமைப்பு - வடக்குமாகாண சபை உறுப்பினர் தியாகராசா!
பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல்
பட்டதாரிகளை பிரதேச செயலகத்தில் பதியுமாறு கோரிக்கை!
|
|