உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சை அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும். பரீட்சைக்கான கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
மேலும் பரீட்சையில் வினாத்தாள்களுக்கான வினாக்களை வாசித்து புரிந்து கொள்வதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
Related posts:
யாழ்ப்பாணம் சீரழிய அனுமதியேன்! - நீதிபதி இளஞ்செழியன் !
வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு இன்று!
வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பம்!
|
|