இலங்கை – இந்தியா இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அதிகாரத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பை மேலும் விவாதிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னாருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ். பல்கலையில் சர்வதேச ஆய்வரங்கு!
கடும் காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு...
|
|