இலங்கையில் தொடர்ந்தும் ஆயிரத்துக்கும் அதிகமானாருக்கு கொரோனா தொற்றுறுதி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 452 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 447 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய 5 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 512 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் 41 வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு - 30 திட்டங்கள் நிறைவு என்கிறார்...
இலங்கையுடன் கைகோர்க்க சீனா தயார் - சீனா உயர் அரசியல் ஆலோசகர்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1924 ஆக அதிகரிப்பு!
|
|