இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் – ரஷ்யா அறிவிப்பு!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சக்கரோவா தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அதன் உள்விவகாரம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் அந்த நாட்டின் அரசியல் நெருக்கடியான நிலை சுமுகமாக தீர்க்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம், அதற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம். நிலைமை வழமைக்குத் திரும்பும் என்றும், இலங்கையின் புதிய அதிகாரிகள் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதையில் வாகனம் செலுத்தியோரின் அனுமதிப் பத்திரங்கள் தடுத்துவைப்பு!
கொரோனா அச்சுறுத்தல்: உங்கள் வயதான பெற்றோர்களுக்கு தெளிவூட்டுங்கள் – ஜனாதிபதி!
இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது ...
|
|