இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் கொரோனா: அடுத்த இரண்டு வாரங்களும் மிக ஆபத்தானவை என எச்சரிக்கும் வைத்தியர்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல் நிலை இரண்டாம் கட்டத்திற்கு விரிவடையும் காலப்பகுதி தற்போது ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக முன்னரை விடவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் இலங்கை சிறப்பு மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்களினால் சுகாதார அமைச்சிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட விரிவாக்க காலப்பகுதியில் நாடுமுழுவதும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஏப்ரல் மாதம் இறுதி வரை சிக்கலுக்குரிய நிலைமை ஏற்பட கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவின் டி சில்வா தெரிவித்திருந்தார்.
அத்துடன் முழுமையான முடக்கம் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள அபாயமான நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அனைவரும் சுகாதார அதிகாரிகள் ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளில் இருந்தால் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|