இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடையாக வழங்குகின்றது அவுஸ்திரேலியா!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் தேவைகளுக்கும் உதவியளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சுமார் 3000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கவும் அவுஸ்திரேலியா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
பெற்றோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ்: முதன்முதலில் எச்சரித்த சீன மருத்துவர் உயிரிழப்பு!
|
|