இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்களை கைப்பற்றிய இந்திய காவல்துறை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை தமிழக காவல்துறை நேற்று ராமநாதபுரத்தில் உள்ள வேதாளை கிராமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றப்பட்டிருந்தபோதே இந்த போதை மருந்துகள் வேதாளை கடற்பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 6 இலட்சம் மாத்திரைகளை காவல்துறையினர். கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது. தப்பியோடிய கடத்தல்காரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அத்துடன் கடத்தல் நடவடிக்கைகளை கண்டறிய கியூ பிரிவு காவல்துறையினர் கடலோர பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
19 ஆவது திருத்தத்தை இரத்து : 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது - துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்த...
தொடர் தோல்விகளின் எதிரொலி - இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி அழைப்பு!
|
|