இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை – இந்தியா!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான குழுக்கள் முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா என்பது தொடர்பில் இந்தியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அத்துடன் குறித்த தீர்மானத்தின் மீது இந்தியா உறுதியற்றதாகவே இருந்தது. எனினும் 13 வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த இந்தியா இலங்கையை வலியுறுத்தியது.
மேலும் தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்த நாடுகளில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் கியூபா ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல்கள் காலதாமதமின்றி உரிய தினத்தில் நடத்தப்பட வேண்டும் - ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி!
கொரோனாவுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தோள் கொடுத்தது சுவிர்சலாந்து – அந்நாட்டு மக்களுக்கு ந...
மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் - தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்ல...
|
|