இலங்கைக்கு உலக வங்கி 25 மில்லியன் டொலர் கடன் உதவி!

உலக வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை செயல்திறன் மிக்க நிர்வாகம் மற்றும் பொது நிதிமுகாமைத்துவ முதலான செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக மேம்படுத்துவதற்கு இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு முன்னெடுத்துள்ள செயல்திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடனான பொது மக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் மனித வள செயல்திறனை மேம்படுத்துவதற்கான பொறிமுறை அபிவிருத்திக்காக இது செலவிடப்படவுள்ளது.
பொது நிதிமுகாமைத்துவம் தொடர்பில் நிதி அமைச்சர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தாம் உதவி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
அரநாயக்க மீட்புப் பணிகளை நிறுத்தும் எண்ணம்!
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி யாழில் தொடர் சத்தியாக்கிரகம்!
நீதிமன்றத்தில் சுவிங்கம் சாப்பிட்ட இளைஞனுக்கு 1000 ரூபா அபராதம்!
|
|