இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விலக்கியுள்ளது 11 நாடுகள்!

பயங்கரவாத தாக்குதலை அடுத்து இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விதித்த 11 நாடுகள் அதனை விலக்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளாந்தம் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200 ஆக தற்போது அதிகரித்திருப்பதாக பணியகத்தின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, இங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம், சுவீடன், சுவிஸ்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் பயண எச்சரிகையை விலக்கிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் கொரோனா: அடுத்த இரண்டு வாரங்களும் மிக ஆபத்தானவை என எச்சரிக்கும் வைத்தி...
நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவ...
உலகில் அதிகமாக விஷத்தை உண்ணும் நாடு இலங்கை - விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய எச்சரிக்கை!
|
|