இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்? – கல்வி அமைச்சின் செயலாளர்!

கொரோனா தொற்றையடுத்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை,சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் எனவும், இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|