இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று(07) நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நள்ளிரவின் பின்னர் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானதாகும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும் தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகங்களூடாகவும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனமேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!
நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெர...
எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாள...
|
|