இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிப்பு!

நாட்டில் இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால் இந்த ஊரங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பான் நாட்டு கலந்துரையாடலுக்குச் செல்ல யாழ் மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் பதிவு!
11 கோடி அபராதம் - இலங்கை மின்சாரசபை!
கோத்தபாய ராஜபக்சவின் வருகையே தமிழர்களுக்கு சிறந்தது - சி.வி.விக்னேஸ்வரன்!
|
|