இன்றுமுதல் கப்பலில் வைத்தே எரிவாயுவின் தரம் ஆராயப்பட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அறிவிப்பு!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்றையதினம்முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தினால் இன்றுமுதல் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றிரவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவற்றின் பல்வேறு வெடிப்புச் சம்பவங்கள் தலவாக்கலை, திம்புளை, நிட்டம்புவ – திஹாரி ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.
எனினும் இந்த வெடிப்பு சம்பவங்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதுவரை பதிவான வெடிப்பு சம்பவங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்குச் சேதம் ஏற்படவில்லையென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமையல் அடுப்புகள் மற்றும், எரிவாயு குழாய்களுக்கே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|