இந்த ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

2017ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்ரெம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் செயன்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 20 முதல் நவம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியும், உயர்தர சாதாரண தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியும் இடம்பெறும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலும், அதன் செயன்முறைப் பரீட்சைகள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றவுள்ள பெண் பொலிஸ் அதிகாரி!
புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!
ஓகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
|
|