இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
Wednesday, September 21st, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
இதன் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த தீவிரவாதச் செயலை கண்டித்துள்ளார்.
Related posts:
பரீட்சையின் போது மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை!
O/L மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை - பரீட்சைகள் திணைக்களம்!
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு - அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் இடையே உள்ளூர் சந்தையில் ...
|
|