இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூரிடம் இலங்கை கோரிக்கை – வேலைவாய்ப்பு வழங்குவது குறித்த சிங்கப்பூர் அவதானம்!
Friday, June 10th, 2022சிங்கப்பூரிடம் இருந்து பிரிட்ஜ் லோன் என்ற இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.
இடைக்கால நிதியுதவியைப் பெறுவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உதவிகளை இதன்போது அமைச்சர் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரியதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் இணங்கியுள்ளது.
தற்போது சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
சிங்கப்பூருக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், இலங்கை பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்குமாறும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, சுகாதாரத் துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பைபுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|