ஆலய திருவிழாவில் பட்டாசு வெடித்து இளைஞன் படுகாயம்!
Saturday, March 2nd, 2019யாழ். குரு நகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் பட்டாசு கொளுத்திய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பட்டாசு கொளுத்திய போது அவரின் வலது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் எரிகாயம் ஏற்பட்டுள்ளது.
பெருமளவான பட்டாசுகள் இந்த சந்தர்ப்பத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் கட்டுப்பாடு - பலதரப்பும் கடும் எதிர்ப்பு...
இன்றுமுதல் திங்கட்கிழமை வரை மின் வெட்டு கிடையாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைக்க ஜேர்மன் நடவடுக்கை!
|
|