ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

Wednesday, January 6th, 2021

ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிகிச்சை மத்திய நிலையங்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுதேச வைத்திய மேம்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலையை கேந்திரமாக கொண்டு அதன் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுதேச வைத்திய மேம்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், இதற்காக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய பிரிவுகளின் உதவியினை பெற்று வேறுபட்ட முறைக்கு சிகிச்சை அளிக்கை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈ.பி.டி.பி ஆதரவு: பருத்தித்துறை நகரசபை ஆட்சியையும் வசப்படுத்தியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
அடுத்த வாரம்முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்...
தற்போதைய சூழலில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது - சுகாதார அமைச்சு...