ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் – சகல ஊடக நிறுவனங்களுக்கும் அரசின் அறிவிப்பு!

நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் மூலம் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இது போன்ற காணொளி பதிவுகள் ஊடக நிறுவனங்களில் காணப்பட்டால் அவற்றை ஒளிபரப்ப வேண்டாம் என்பதே அரசாங்கத்தின் கோரிக்கை என அதன் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
Related posts:
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!
இலங்கையில் இணையத்தள சுதந்திரம் அதிகரிப்பு!
நாட்டை திறப்பது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் - சுகாதா...
|
|