ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கு நேர்முகப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு 2017 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடசாலைகளுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13,14,15,16 ஆம் திகதிகளிலும்,சங்கீதம் மற்றும் நடன பாடங்களுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறும் என கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அறிவித்துள்ளார்
Related posts:
கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
இலங்கை மீது அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையில் தளர்வு!
சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
|
|