ஆங்கில மொழி ஆற்றலை அபிவிருத்தி செய்ய கல்வியமைச்சு நடவடிக்கை!

இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை அபிவிருத்தி செய்ய கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்திற்கும் அமெரிக்கத் தூதுவர் திருமதி அலெய்னா பி ரெப்ளிஸ் ஆகியோருக்கும் இடையில் விசேட பேச்சுறவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அமெரிக்காவின் சமாதானப் படையைச் சேர்ந்த தொண்டர் ஆங்கில ஆசிரியர்களின் சேவை பெற்றுக்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஊவா மற்றும் மத்திய மாகணாங்களில் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படும். ஆரம்பத்தில் 30 ஆசிரியர்களின் சேவை பெற்றுக்கொள்ளப்படும். பின்னர் இந்த எண்ணிக்கை 150 வரை அதிகரிக்கப்படும். ஒரு தொண்டர் ஆசிரியரின் சேவைக்காலம் 2 வருடங்களாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தாதியர் பட்டப்படிப்புக்கு ஜனாதிபதி நிதியுதவி!
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை - நிதி இராஜாங்க அ...
21 ஆவது திருத்த இறுதி வரைபு தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் - நீதி அமைச்சரால் நாடாளுமன்ற உறுப்பின...
|
|